திருப்பதி தேவஸ்தானம் சொன்ன "வேற லெவல்" ஐடியா.. கையில் வெறும் "குச்சி" போதுமாம்.. எதுக்குன்னு பாருங்க
திருப்பதி: திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பானது, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.. இதுகுறித்து அறிக்கை ஒன்றும் வெளியாகி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.. அந்தவகையில், தற்போது தொடர் விடுமுறை காரணமாக பெரும்பாலானோர் திருப்பதிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
திருப்பதியில் இருந்து மலை மீதுள்ள திருமலைக்கு பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும், பஸ், 2 அல்லது 4 சக்கர வாகனங்கள் மூலமாக செல்வதற்கு சாலைகளும் பிரத்யேகமாக உள்ளன.. அதேபோல, படிக்கட்டுகள் வழியாக மேல் திருப்பதிக்கு செல்ல வேண்டுமானால், எப்படியும் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும்.

சிறுமி உயிரிழப்பு: இப்படித்தான், கடந்த வாரம் அங்கு படிக்கட்டு வழியாக, திருமலைக்கு ஒரு குடும்பம் சென்று கொண்டிருந்தது. அவர்களுடன், லக்ஷிதா என்ற 6-வயது சிறுமியும் நடந்து சென்று கொண்டிருந்தாள்.. ஆனால், பெற்றோரிடமிருந்து சற்று விலகி நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்போது, திடீரென அந்த மலைப்பகுதியிலுள்ள காடுகளில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, சிறுமியை தாக்கிவிட்டது. இதில், அந்த குழந்தை அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.
இந்த சம்பவத்திற்கு பிறகு திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்தே செல்ல விரும்பும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை தேவஸ்தான வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது... இது தொடர்பான அறிக்கையும் வெளியிட்டிருந்தது.
அதில், "நடந்து செல்ல விரும்பும் பக்தர்கள் உணவு பண்டங்களை வழியில் இரைக்கக்கூடாது. நடைபயணமாக படிக்கட்டில் ஏறிச்செல்லும் பக்தர்கள் இனி 100 பேர் கொண்ட ஒரு குழுவாக ஒன்றாக இணைந்துதான் செல்ல வேண்டும். தாக்க வரும் விலங்குகளிடமிருந்து தற்காத்து கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு கம்பு கொடுக்கப்படும்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திறந்தவெளி பகுதி: திருமலையிலுள்ள காடு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுக்களின் பக்கவாட்டில் உள்ள திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் வாரியம் தெரிவிக்கிறது.

இந்த அறிவிப்பானது பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறது.. பக்தர்களின் கையில், கம்பு அல்லது குச்சியை தருவதால், வனவிலங்குகளிடமிருந்து தப்பிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்..
தேவஸ்தானம்: இதனிடையே, தேவஸ்தான வாரியம் மற்றொரு தகவலை வெளியிட்டுள்ளது.. திருமலையிலுள்ள காடு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுக்களின் பக்கவாட்டில் உள்ள திறந்தவெளியை மூடினாலே போதும்.. இந்த ஆபத்துகளை தவிர்க்கலாம்.. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதிக்காக, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications