போராட்டம் நடத்திய விவசாயிகளின் கூடாரங்களை அகற்ற போலீசார் மிரட்டல்… டெல்லி பரபரப்பு
டெல்லியில் 37 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள் உடனடியாக அங்கிருந்து கூடாரங்களை அகற்ற வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
டெல்லி: வறட்சி நிவாரணம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தினர்.
சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 37 நாட்களாக பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வந்தனர்.

நூதனப் போராட்டம்
எலிக்கறி, பாம்புக்கறி உண்ணுதல், மண்சோறு சாப்பிடுதல், மீசை, தாடியை மழித்தல், மொட்டை போடுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து நடத்தி வந்தனர்.

பேச்சுவார்த்தை
இந்நிலையில், நேற்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விவசாயிகள் தலைவர் அய்யாகண்ணுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அய்யாகண்ணு அறிவித்தார்.

போலீசார் மிரட்டல்
இந்நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் போடப்பட்டுள்ள கூடாரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும், தமிழக விவசாயிகளின் உடமைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் விவசாயிகள் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

ரிசர்வ் படை
விவசாயிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக ஜந்தர் மந்தர் பகுதியில் மத்திய ரிசர்வ் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் அடுத்தது என்ன செய்வது என்று யோசித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications