மீனவர்கள் விவகாரம்: பிரதமருடன் திமுக எம்.பிக்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் திமுக எம்.பிக்கள் நேரில் வலியுறுத்தினர்.
டெல்லியில் திமுக எம்.பிக்கள் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன்சிங், இந்த விவகாரம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் திமுக எம்.பிக்கள் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications