முல்லைப் பெரியாறு அருகே புது அணை- கேரளா ஆய்வு... தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு நடத்தும் ஆய்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோாி தமிழக அரசு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் எதிர்ப்பையும் மீறி முல்லைப் பொியாறு அணை அருேக புதிய அணை கட்ட கேரள அரசு அப்பகுதியில் துளையிடுதல், மற்றும் கள ஆய்வுப் பணியை மேற்கொள்வதாக தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும் வனவிலங்கு தேசிய வாரிய நிலைக்குழு அனுமதித்ததால் கேரள அரசு புதிய அணையின் சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆய்வு நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே 03.12.2014 அன்று வனவிலங்கு தேசிய வாரிய நிலைக்குழு அளித்த அனுமதியை ரத்து செய்ய மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையை வழி நடத்த வேண்டும் என்றும் கேரள அரசின் ஆய்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மனுவில் தொிவித்துள்ளது.
இது தொடா்பான உத்தரவை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications