காவிரியில் இருந்து 45 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
டெல்லி: காவிரியில் இருந்து 45 டி.எம்.சி. நீரை கர்நாடகா உடனே திறந்துவிட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றம் தமிழக அரசு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடகா உரிய காலத்தில் திறந்துவிடுவதில்லை. இதனால் முப்போகம் விளைவிக்கப்பட்ட காவிரி டெல்டா பாசனப்பகுதியில் ஒருபோக சாகுபடியே பெரும் கேள்விக்குறியாகி வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் போதுமான மழை இல்லாத காரணத்தால் வியாழக்கிழமையன்று மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் அடியாக அதிகரிக்கப்பட்டது. அப்போது அணையின் நீர் இருப்பு 31.57 டி.எம்.சிதான் இருந்தது.
இதனையடுத்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி தமிழகத்துக்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை தரவேண்டிய 45.டி.எம்.சி. நீரை கர்நாடகா உடனே திறந்துவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications