Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 தமிழர் விடுதலை; தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசிடம் கருத்தும் கேட்டுள்ளது. அதே நேரத்தில் 3 நாட்களுக்குள் மத்திய அரசு கருத்து தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால் தமிழக அரசு தமக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

TN's decision to free Rajiv Gandhi killers not legally tenable: PM

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங், தீவிரவாதத்துக்கு எதிராக எந்த ஒரு அரசும், அரசியல் கட்சியும் மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடாது. ராஜிவ் படுகொலை என்பது நாட்டின் ஆன்மா மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

7 பேரை விடுதலை செய்வது என்பது நீதித்துறையின் அனைத்து மாண்புகளுக்கும் முரணானது.7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளார்.

7 தமிழரை விடுதலை செய்ய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் 7 தமிழர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+