சட்ட விரோத பாலினச் சோதனை நிலையங்களைக் கண்டறிய "007"களை நியமிக்கும் பஞ்சாப்!
சண்டிகர்: பஞ்சாப்பில் அதிகரித்து வருகின்ற பெண் சிசுக் கொலைகளைத் தடுக்கும் வகையில் தனியார் ஸ்கேன் சென்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க தனியார் துப்பறியும் நிறுவனங்களை நாடியுள்ளது அம்மாநில அரசு.
பஞ்சாப்பில் செயல்பட்டு வருகின்ற பல்வேறு தனியார் ஸ்கேன் நிறுவனங்களிலும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறியும் சோதனைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சரான சுர்ஜித் ஜெயனி, சட்ட விரோதமாக பாலினம் கண்டறியும் சோதனைகளைக் கண்டறிந்து தடை செய்யும் வகையில் துப்பறியும் நிறுவனங்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளார்.
மேலும், அனைத்து மருத்துவமனை உயர்மட்ட மருத்துவர்களும் அந்தந்த மருத்துவமனை சார்ந்த ஸ்கேன் சென்டர்களைக் கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அம்மாநிலத்தில் கடந்த 2001ல் 798 ஆக இருந்த ஆண்-பெண் விகிதாச்சாரம் 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 846ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்தே பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இதுபோன்ற தவறான செயல்களை கண்டறிந்து தடுக்க பஞ்சாப் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
மேலும், சட்ட விரோத பாலின சோதனை நிலையங்களைப் பற்றி துப்பு கொடுப்போருக்கான சன்மானத்தையும் 1 லட்ச ரூபாயிலிருந்து, ரூ.2,00,00 ஆக உயர்த்தியுள்ளது பஞ்சாப் அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications