இன்று சீமாந்திரா பந்த்: இருசக்கர வாகனங்களைக் கூட அனுமதிக்க மறுப்பு
திருப்பதி: தனி தெலங்கானாவை எதிர்த்து இன்று (செப்டம்பர் 24ம் தேதி செவ்வாய்க்கிழமை) சீமாந்திரா பகுதி முழுவதும் பந்த் நடத்துகிறது கூட்டு நடவடிக்கை குழு.
கடந்த 54 நாட்களாக ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலங்கானா அமைக்கும் முடிவை எதிர்த்து சீமாந்திரா பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அப்பகுதி போராட்டக்காரர்கள் தங்கள் பணிகளையும் விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு இந்த போராட்டங்களுக்கு செவி சாய்க்காமல் தனி தெலங்கானா மாநில அறிவிப்பை திரும்பப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து இன்று சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்கள் இணைந்து முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ஏற்கனவே ஒருமுறை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது, திருமலைக்கு 1 முறை பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்குப் பின்னர் நடைபெற்ற 2 முழு அடைப்பு போராட்டத்தின் போதும், தேவஸ்தான அதிகாரிகளின் வேண்டுகோளால் திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், இன்று நடைபெறும் பந்த்தில் திருப்பதிக்குச் செல்ல போக்குவரத்து வசதி தடை செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இருசக்கர வாகனங்களுக்குக் கூட தடை விதித்துள்ளது கூட்டு நடவடிக்கைக் குழு. ஏற்கனவே, இன்று பக்தர்கள் திருப்பதிக்கு வருவதைத் தவிர்க்கவும் என கோரிக்கை விடுக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று முதல் இம்மாத 30-ஆம் தேதி வரை தனியார் பள்ளிகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, திருப்பதியில் உள்ள துணிக்கடை வியாபாரிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 25-ஆம் தேதி முதல் 1 வாரம் வரை காலை 9 மணிமுதல் 11 மணிவரை மின்சாரத்தை துண்டித்து விட்டு வியாபாரம் செய்ய உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications