காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று நிகழ்ந்த மோதலில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இதில் லக்ஷ்ர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி அபு காசா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த பகுதியில் வேறு யாரேனும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதை கண்டறிய ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட அபு காசா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் எல்லைப் பகுதியில் ஊடுருவி ஹந்த்வாராவில் பதுங்கி இருந்ததாகவும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications