தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை... ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
ஜம்மு : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தின் ககாபுரா பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படியில், அப்பகுதிக்குச் சென்ற பாதுகாப்பு படையினர், பேகம்பாக் என்ற கிராமத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்துப் பிடிக்க முயற்சி செய்தனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. ஒரு கட்டத்தில், பாதுகாப்புப் படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், தீவிரவாதிகள் பின்வாங்கினர். எனினும், பாதுகாப்பு படையினர் தொடர்ந்து நடத்திய தாக்குதலில், லஷ்கர் அமைப்பின் முக்கிய தளபதியான இர்ஷத் கனி என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
இவன், கடந்த 2013 ஆம் ஆண்டு ஹைதர்போரா பகுதியில் ராணுவ கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றியவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவனைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications