தொலைபேசி சந்தாதாரர் எண்ணிக்கை 94.29 கோடியாக உயர்வு - டிராய் அறிவிப்பு!
டெல்லி: இந்தியாவில் நடப்பு 2014 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டின் ஒட்டு மொத்த தொலைபேசி சந்தாதாரர் எண்ணிக்கை 94.29 கோடியாக அதிகரித்துள்ளது.
முந்தைய ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்த எண்ணிக்கை 93.30 கோடியாக இருந்தது.
தற்போதைய காலாண்டில் தொலைபேசி சந்தாதாரர் எண்ணிக்கை 1.07 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மதிப்பீட்டு காலாண்டில் மொபைல் போன் சந்தாதாரர் எண்ணிக்கை 1.04 கோடி அதிகரித்து 90.45 கோடியிலிருந்து 91.49 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இது 1.15 சதவீத வளர்ச்சியாகும்.
அதேசமயம் சாதாரண தொலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 2.85 கோடியிலிருந்து 2.80 கோடியாக குறைந்துள்ளது.கணக்கீட்டு காலாண்டில் இன்டர்நெட் சந்தாதாரர் எண்ணிக்கை 3 சதவீதம் உயர்ந்து 25.16 கோடியிலிருந்து 25.91 கோடியாக அதிகரித்துள்ளது.
ஒரு ஜி.எஸ்.எம் வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் மாதாந்திர சராசரி வருவாய் மதிப்பீட்டு காலாண்டில் 113 ரூபாயிலிருந்து 119 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போன்று சி.டி.எம்.ஏ வாயிலான சராசரி வருவாயும் 105 லிருந்து 112ஆக அதிகரித்துள்ளது என டிராய் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு "மொபைல் நம்பர் போர்டபிலிட்டி" வசதியை வரும் மே மாதத்திற்குள் முழுமையாக அளிக்க வேண்டும் என தொலைத் தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போது இந்த வசதியை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் பயன்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.தொலைத் தொடர்பு துறையின் இந்த புதிய உத்தரவு செயல்படுத்தப்படும் நிலையில் உள்நாட்டில் எங்கு சென்றாலும் ஒரே மொபைல் எண்ணை தக்க வைத்து கொள்வதோடு தேவையானால் சேவை நிறுவனங்களை மாற்றி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications