அவுக டூரிஸ்ட் கேங்...வாக்குறுதி கொடுப்பாங்க...செய்யவே மாட்டாங்க...அமித்ஷா மீது திரிணாமுல் அட்டாக்
கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு வருகை தந்த டூரிஸ்ட் கேங் (பாஜக தலைவர்கள்) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட எதையும் அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் சாடியுள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரிகள் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இருப்பினும் திரிணாமுல்- பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒற்றை மனிதராய் திரிணாமுல் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜி, பாஜகவை எதிர்த்து களம் காண்கிறார். பாஜக தரப்பில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் என பலரும் இடைவிடாமல் பிரசாரம் செய்கின்றனர்.
அத்துடன் திரிணாமுல் காங்கிரஸின் மன உறுதியை அழிக்கும் வகையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என வந்து சேருவோர் அத்தனை பேரையும் வாரி அணைத்துக் கொள்கிறது பாஜக. இந்த நிலையில் உள்உறை அமைச்சர் அமித்ஷா, பாஜகவின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டெரிக் ஓ பிரையன், அவர்கள் எல்லாம் டூரிஸ்ட் கேங் (பாஜக தலைவர்கள்). வருவார்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள். ஆனால் ஒருபோதும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது இல்லை என்பதே வரலாறு என கடுமையாக சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications