'சென்னையில் ஒரு நாள்' பட பாணியில்.. காம்ப்ளியின் உயிரை காத்த டிராபிக் போலீஸ்!
மும்பை: கார் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா பாட்டில் மற்றும் கான்ஸ்டபிள் சேர்ந்து 12 நிமிடத்தில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி கடந்த வெள்ளிக்கிழமை சேம்பூருக்கு சென்றுவிட்டு மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு பஜேரோ காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுங்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வந்தபோது கார் ஓட்டி வந்த காம்ப்ளிக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு வாகனத்தை நடுரோட்டில் நிறுத்தினார்.
நடுரோட்டில் கார் ஒன்று நின்று போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதை பார்த்த போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிள் குமார்தத்தா ஷெட்கே அந்த வாகனத்திற்கு அருகில் சென்று பார்த்தபோது காம்ப்ளி நெஞ்சுவலியால் துடித்துக் கொண்டிருந்தார். உடனே அவர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுஜாதா பாட்டிலுக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து காம்ப்ளியின் நிலைமையை பார்த்துவிட்டு போக்குவரத்து நெரிசலில் அவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது கடினம் என்பதை உணர்ந்தார்.

உடனே அவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சியோனில் இருந்து லீலாவதி மருத்துவமனைக்கு செல்லும் வழியை ஒழுங்குபடுத்திக் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து சுஜாதாவும், குமார்தத்தாவும் சேர்ந்து காம்ப்ளியை 12 நிமிடத்தில் மருத்துவமனையில் சேர்த்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.
தற்போது காம்ப்ளியின் உடல் நிலை தேறி வருவதாக அவரது மனைவி ஆன்ட்ரியா தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications