சொத்துக்குவிப்பு வழக்கு நடக்கும்போது முதல்வராக பதவி வகிக்கலாமா? ஜெ.,வுக்கு எதிராக மனு
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வரும் போது ஜெயலலிதா முதல்வர் பொறுப்பில் வகிப்பது சரியல்ல, உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பெங்களூரு நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் ராசாராம் ஆகியோர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்து சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பாக உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது வரை பல வழிகளில் வாய்தா வாங்கி வழக்கிற்கு ஒத்துழைக்காமல் இருந்து வந்தார் ஜெயலலிதா.
மேலும் இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் ஜூன் 16-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.
பதவி விலக கோரி வழக்கு
இந்நிலையில் பெங்களூரூ சிறப்பு நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி மற்றும் ராசாராம் ஆகியோர் ஒரு மனுவை தாக்கல் செய்தனர் . இந்த மனு மீதான விசாரணையில் இருவரும் வாதிடுகையில், ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
ஒரு முதல்வராக இருப்பதால் பல்வேறு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இன்னும் பல முறைகேடுகள் செய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஒருவர் பதவியில் இருந்து கொண்டு வழக்கை சந்திப்பது சரியானதாக இருக்க முடியாது.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பொறுப்பில் இருந்த சீனிவாசன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் போது இவர் பொறுப்பில் இருந்தால் முறையான, நேர்மையான விசாரணை நடக்க முடியாது. இவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டே கூறியது. இதனையடுத்த அவர் பதவியில் இருந்து விலகினார்.
ஒரு கிரிக்கெட் வாரியத்திற்கே இப்படி ஒரு நிலையை எடுக்கும் போது, ஒரு மாநில முதல்வராக இவர் எப்படி நீடிக்க முடியும், இது சரியாகாது எனவே இவர் முதல்வர் பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர்.
இந்த பொறுப்பில் இருந்து ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர்.
விவாதத்தை கேட்ட நீதிபதி ஜான்மைக்கேல் குன்கா, இது தொடர்பாக விசாரிக்க எனக்கு அதிகாரம் இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கைத்தான் விசாரிக்க உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது என்றார்.
ஆனால் மனுதாரர்கள் இதனை மறுத்தனர். உங்களுக்கு அதிகாரம் உண்டு. நீங்கள் முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் பல ஆவணங்களை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்கிறோம். பின்னர் தீர்ப்பு வழங்குங்கள் என்று கோரினர்.
இதனையடுத்து வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications