ஆதார் எண்ணை வெளியிட்டு சிக்கிய டிராய் இயக்குனர்.. மகளுக்கு இமெயிலில் மிரட்டல் விடுத்த ஹேக்கர்கள்!
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மாவின், மகளுக்கு ஹேக்கர்கள் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.
Recommended Video

டெல்லி: தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மாவின், மகளுக்கு ஹேக்கர்கள் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆர்எஸ் சர்மாவின், ஆதார் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. தேவையில்லாமல் சமூக வலைத்தளத்தில் அவர் விட்ட சவால், தற்போது அவருக்கு பெரிய பிரச்சனையை உண்டாக்கி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பிஎஸ் சர்மா, ஆதார் மிகவும் பாதுகாப்பானது என்று பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தார். இந்த நிலையில் சர்மாவின் பேட்டியை பார்த்த நபர் ஒருவர், உங்களுக்கு ஆதார் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தால், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை வெளியிட முடியுமா என்று கேட்டு இருக்கிறார்.
|
சவால் விட்டார்
இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் தன்னுடைய ஆதார் எண்ணை வெளியிட்டு முடிந்தால் என்னுடைய தனிப்பட்ட தகவல்களை வெளியிடுங்கள் என்று சவால் விடுத்தார். இதற்கு எலியாட் என்ற, பிரான்ஸ் ஹேக்கர் அவர் தகவல் அனைத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.
|
போன் நம்பர்
இந்த நிலையில் எலியாட், சர்மாவின் ஆதார் எண் மூலம் அவரது போன் நம்பர் , வங்கி கணக்கு, மகளின் புகைப்படம் எல்லாவற்றையும் எலியாட் வெளியிட்டார். அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டும் இருக்கிறார். இதேபோல் பலரும் அவரது விவரங்களை திருடினார்கள்.
|
வங்கி விவரம்
இந்தநிலையில்தான், சர்மா பெரிய பிரச்சனையில் சிக்கினார். அவருக்கு நேற்று ஹேக்கர்கள் 1 ரூபாய் பணம் அனுப்பி இருக்கிறார்கள் . அதாவது ஆதார் பேமண்ட் மூலம், அவருக்கு 1 ரூபாய் பணம் அனுப்பி இருக்கிறார்கள். அதேபோல் அவரது வங்கி கணக்கு விவரத்தையும் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

மெயில்
இந்த நிலையில் தற்போது அவரது மகளின் மெயில் ஐடியை கண்டுபிடித்து, அதற்கும் மெயில் அனுப்பி இருக்கிறார்கள். அவரது மகள் கவிதா சர்மாவின் புகைப்படத்தை ஹேக்கர்கள் ஏற்கனவே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவருக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்கள்.

என்ன மிரட்டல்
அந்த மெயிலை இந்தியாவில் உள்ள சில செய்தியாளர்களுக்கும் பார்வேர்ட் செய்து இருக்கிறார்கள். அதில் சர்மா உடனே மன்னிப்பு கேட்கவேண்டும். ஆதார் பாதுகாப்பு இல்லை என்ற தகவலை வெளியிட வேண்டும். பின் அவருடைய கணக்கை டெலிட் செய்ய வேண்டும், இல்லையென்றால், உங்களை பற்றிய மோசமான ரகசியத்தை வெளியிட வேண்டி இருக்கும் என்று மிரட்டி இருக்கிறார்கள்.
-
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications