டாய்லெட் பிரேக் கூட இல்லை: மனித உரிமைகள் ஆணையத்திடம் ரயில் டிரைவர்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மனிதநேயம் இல்லாத, மோசமான நிலையில் பணியாற்ற வைக்கப்படுவதாகக் கூறி ரயில் டிரைவர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகியுள்ளனர்.

இந்திய ரயில்வே துறையில் வேலை செய்யும் 69 ஆயிரம் ரயில் டிரைவர்கள் தங்களின் பணியிட நிலை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் தங்கள் புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

நாங்கள் மோசமான நிலையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். சில நிமிடங்கள் கூட எங்களுக்கு ஓய்வு இல்லை. சாப்பிட ஏன் இயற்கை உபாதை கழிக்கக் கூட நேரம் அளிக்கப்படுவது இல்லை.

Train drivers drag Railways to Human Rights Commission for no 'toilet breaks' during work

12 மணிநேர ஷிப்ட்டால் எங்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தம் ஏற்படுகிறது. ரயில் என்ஜின் பகுதியில் கழிப்பறைகளே கிடையாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவர்களுக்கு ஷிப்ட் நேரத்தில் சாப்பிட, இயற்கை உபாதை கழிக்க தனியாக பிரேக் விட முடியாது. அவ்வாறு செய்தால் பயணிகளின் பாதுகாப்புக்கு எதிராக இருக்கும். மேலும் ரயில்கள் காலதாமதாக இயங்கும் என்று கருதுகிறது ரயில்வே நிர்வாகம்.

இது குறித்து ரயில் டிரைவர்கள் சங்க தலைவர் எஸ். கே. பந்தி கூறுகையில்,

இந்திய ரயில்வே தான் டிரைவர்களுக்கு பிரேக்கே தருவது இல்லை. டிரைவர்களுக்கு வார இறுதியில் கூட விடுப்பு இல்லை. டெல்லி மெட்ரோ டிரைவர்களுக்கு எல்லாம் மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை 40 நிமிடங்கள் பிரேக் அளிக்கிறார்கள். விமானிகளுக்கு கூட அடிக்கடி பிரேக் கிடைக்கிறது. ரயில் டிரைவர்கள் உயர் அதிகாரிகளின் வீடுகளில் வேறு வேலை செய்ய வேண்டி உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+