டெல்லிக்கும் பரவியது வன்முறை.. பஸ், ரயில்களுக்கு தீ வைப்பு
டெல்லி: தேரா சச்சா அமைப்பின் தலைவர் சாமியார் ராம் ரஹிம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொண்டு பஞ்சாப், ஹரியானாவில் பெரும் கலவரத்தில் குண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேரா சச்சா ஆதரவாளர்களால் டெல்லிக்கும் கலவரம் பரவியுள்ளது. ஆனந்த்விகார் (ரெவா எக்ஸ்பிரஸ்) மற்றும் சாத்ரா ரயில் நிலையங்களில் முறையே 1 மற்றும் இரு ரயில்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

டெல்லியிலுள்ள பாபு ஜெகஜீவன் ராம் மருத்துவமனை அருகே பஸ் ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாப் செல்லும் பல பாசஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பயணிகள் பாதுகாப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே ராஜஸ்தானில் தேசா சச்சா ஆசிரமங்கள் மூடப்பட்டு ஆதரவாளர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
Here it begins in delhi too #LoniChowk @mahajournalist @imanojprabakar @GunasekaranMu @Zakka_Jacob pic.twitter.com/bnpolhOJfe
— Suchi Soundlover (@suchiseetharam) August 25, 2017
பஞ்சாப், சண்டிகருக்கு ராணுவம் விரைந்துள்ளது. டெல்லி எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் டெல்லியில் கலவரம் பரவியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே டெல்லியில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டதாக இரவு காவல்துறை அறிவித்தது.












Click it and Unblock the Notifications