200கிமீ தூரம் வழி மாறி சென்ற ரயில்.. போராட சென்ற விவசாயிகளை நடுவழியில் தவிக்கவிட்ட ரயில்வே
டெல்லியில் இருந்து மஹாராஷ்டிரா செல்ல வேண்டிய ரயில் 200 கிமீ தூரம் தவறாக சென்று மத்திய பிரதேச மாநிலத்தை அடைந்து இருக்கிறது.
டெல்லி: டெல்லியில் இருந்து மஹாராஷ்டிரா செல்ல வேண்டிய ரயில் 200 கிமீ தூரம் தவறாக வழி மாறி சென்று இருக்கிறது. இதன் காரணமாக இந்த ரயில் மத்திய பிரதேச மாநிலத்தை அடைந்து உள்ளது.
இந்த ரயிலில் 1500க்கும் மேற்பட்ட விவாசாயிகள் பயணித்து இருக்கிறார்கள், மேலும் இவர்கள் அனைவரும் டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்திவிட்டு திரும்பி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் இந்த மோசமான அலட்சியம் காரணமாக விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

டெல்லியில் போராட்டம்
மஹாராஷ்டிராவை சேர்ந்த 1500 க்கும் அதிகமான விவசாயிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்தனர். இவர்கள் பல மாநில விவசாயிகளுடன் சேர்ந்து ஒன்றாக போராட்டங்களில் ஈடுபட்டனர். கடன் தொல்லை, விலைவாசி உயர்வு, புதிய திட்டங்கள் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடந்தது. இந்த நிலையில் நேற்று அவர்கள் அனைவரும் டெல்லியில் இருந்து மஹாராஷ்டிரா செல்வதற்காக 'ஸ்வபிமணி எக்ஸ்பிரஸில்' பயணித்து இருக்கிறார்கள்.

வழி தவறியது
இந்த ஸ்வபிமணி எக்ஸ்பிரஸ் டெல்லியில் இருந்து மஹராஷ்டிரா செல்ல வேண்டியது. ஆனால் இந்த ரயில் 200 க்கும் அதிகமான கிலோ மீட்டர் தவறான வழியில் சென்று இருக்கிறது. மேலும் ரயிலில் இருந்த ஊழியர்களுக்கு கூட இந்த விஷயம் தெரியாமல் இருந்திருக்கிறது. இந்த நிலையில் அந்த ரயில் மத்தியபிரதேசத்தை அடைந்த பின்பே ரயில் வழி மாறி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

மீண்டும் போராட்டம்
இதையடுத்து வழி தவறி சென்றது குறித்து விவசாயிகளிடம் சரியான விளக்கத்தை அளிக்க ரயில்வே அதிகாரிகள் மறுத்து இருக்கின்றனர். ஆகவே விவசாயிகள் அதே இடத்தில் மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வலுவடைந்ததை அடுத்து ரயில்வே நிர்வாகம் பல மணி நேரத்திற்கு பின் சமாதானம் செய்ய முயன்றது. அதன்பின் அவர்களுக்கு வேறுறொரு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.

எப்படி நடத்து
தற்போது வரை இதற்கு சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ரயில் டிராக்குகள் தவறாக மாற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது குறித்து தீவிர விசாரணையை தொடங்க ரயில்வே நிர்வாகம் ஆணையிட்டு இருக்கிறது. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications