200கிமீ தூரம் வழி மாறி சென்ற ரயில்.. போராட சென்ற விவசாயிகளை நடுவழியில் தவிக்கவிட்ட ரயில்வே
டெல்லியில் இருந்து மஹாராஷ்டிரா செல்ல வேண்டிய ரயில் 200 கிமீ தூரம் தவறாக சென்று மத்திய பிரதேச மாநிலத்தை அடைந்து இருக்கிறது.
டெல்லி: டெல்லியில் இருந்து மஹாராஷ்டிரா செல்ல வேண்டிய ரயில் 200 கிமீ தூரம் தவறாக வழி மாறி சென்று இருக்கிறது. இதன் காரணமாக இந்த ரயில் மத்திய பிரதேச மாநிலத்தை அடைந்து உள்ளது.
இந்த ரயிலில் 1500க்கும் மேற்பட்ட விவாசாயிகள் பயணித்து இருக்கிறார்கள், மேலும் இவர்கள் அனைவரும் டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்திவிட்டு திரும்பி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் இந்த மோசமான அலட்சியம் காரணமாக விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

டெல்லியில் போராட்டம்
மஹாராஷ்டிராவை சேர்ந்த 1500 க்கும் அதிகமான விவசாயிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்தனர். இவர்கள் பல மாநில விவசாயிகளுடன் சேர்ந்து ஒன்றாக போராட்டங்களில் ஈடுபட்டனர். கடன் தொல்லை, விலைவாசி உயர்வு, புதிய திட்டங்கள் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடந்தது. இந்த நிலையில் நேற்று அவர்கள் அனைவரும் டெல்லியில் இருந்து மஹாராஷ்டிரா செல்வதற்காக 'ஸ்வபிமணி எக்ஸ்பிரஸில்' பயணித்து இருக்கிறார்கள்.

வழி தவறியது
இந்த ஸ்வபிமணி எக்ஸ்பிரஸ் டெல்லியில் இருந்து மஹராஷ்டிரா செல்ல வேண்டியது. ஆனால் இந்த ரயில் 200 க்கும் அதிகமான கிலோ மீட்டர் தவறான வழியில் சென்று இருக்கிறது. மேலும் ரயிலில் இருந்த ஊழியர்களுக்கு கூட இந்த விஷயம் தெரியாமல் இருந்திருக்கிறது. இந்த நிலையில் அந்த ரயில் மத்தியபிரதேசத்தை அடைந்த பின்பே ரயில் வழி மாறி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

மீண்டும் போராட்டம்
இதையடுத்து வழி தவறி சென்றது குறித்து விவசாயிகளிடம் சரியான விளக்கத்தை அளிக்க ரயில்வே அதிகாரிகள் மறுத்து இருக்கின்றனர். ஆகவே விவசாயிகள் அதே இடத்தில் மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வலுவடைந்ததை அடுத்து ரயில்வே நிர்வாகம் பல மணி நேரத்திற்கு பின் சமாதானம் செய்ய முயன்றது. அதன்பின் அவர்களுக்கு வேறுறொரு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.

எப்படி நடத்து
தற்போது வரை இதற்கு சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ரயில் டிராக்குகள் தவறாக மாற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது குறித்து தீவிர விசாரணையை தொடங்க ரயில்வே நிர்வாகம் ஆணையிட்டு இருக்கிறது. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications