Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துடுப்பால் அடித்த "கோச்".. விஷம் குடித்த நீச்சல் வீராங்கனைகள்... ஒருவர் பலி.. 3 பேர் சீரியஸ்!

Subscribe to Oneindia Tamil

ஆலப்புழா: கேரளாவில் பயிற்சியாளரின் கொடுமையால் மனமுடைந்த 4 நீச்சல் வீராங்கனைகள் தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 வீராங்கனைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வாட்டர் ஸ்போர்ட்ஸ் செண்டரில் தங்கி மாணவிகள் பலர் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

Trainer harasses girls, athlete commits suicide in Kerala

நேற்று மாலை 4 மாணவிகள் ஹாஸ்டல் அறையில் மயக்க நிலையில் மீட்கப் பட்டனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அம்மாணவிகள் விஷம் அருந்தியதாக தெரிவித்தனர்.

மருத்துவமனையில் சேர்க்கப் பட்டவர்களில் ஒரு வீராங்கனை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 வீராங்கனைகளும் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உடல் மற்றும் மனரீதியாக பயிற்சியாளர் டார்ச்சர் செய்ததாலேயே வீராங்கனைகள் தற்கொலைக்கு முயற்சித்ததாக, சம்பந்தப்பட்ட வீராங்கனைகளின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக உயிரிழந்த 15 வயது மாணவியை பயிற்சியாளர் துடுப்பு கொண்டு தாக்கியதாகவும், இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், இந்தப் புகார்களை கேரள வாட்டர் ஸ்போர்ட்ஸ் மையம் மறுத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+