தரிசனம் செய்ய வந்த திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு.. தொடர் சர்ச்சையாகும் சபரிமலை
பத்தினம்திட்டா: சபரிமலையில் தரிசனம் செய்ய வந்த திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு காலம் காலமாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு பாஜக, காங்கிரஸ், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. கோயிலுக்கு சென்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரவும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி வந்து செல்லவும் கேரள போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

அனுமதி
அதன்படி சபரிமலை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இந்த தடை உத்தரவை கொஞ்சம் கொஞ்சமாக நீட்டித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சையே இன்னு்ம அடங்காமல் இருக்க சபரிமலைக்கு வந்த திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் மூலம் இன்னொரு சர்ச்சை உருவானது.

தடுத்து நிறுத்திய போலீஸார்
கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த திருநங்கைகள் அனன்யா, திருப்தி, அவந்திகா, ரஞ்சுமோல் ஆகியோர் சபரிமலைக்கு இருமுடி அணிந்து கொண்டு சென்றனர். எருமேலி வழியாக பம்பைக்கு செல்ல முயன்ற போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

தடுத்த போலீஸ்
விசாரணையின் போது முறைப்படி விரதம் இருந்து வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும் திருநங்கைகளை கோயிலுக்கு அனுப்பினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீஸார் அவர்களை கோயிலுக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

திருப்பி அனுப்பிய போலீஸ்
இதனால் போலீஸாருடன் திருநங்கைகள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களை வாகனத்தில் ஏற்றிய டிரைவரையும் போலீஸார் திட்டினர். பெண் உடையில் இருப்பதால் அனுமதிக்க முடியாது என்றும் போலீஸார் தெரிவித்ததாக திருநங்கைகள் வேதனையுடன் கூறினர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications