இந்த வீடியோவை பாருங்க.. கணவனை கொல்லும் முன்.. இன்ஸ்ட்டாவில் ஜாலியாக கப்புள் ரீல்ஸ் போட்ட சோனம்!
போபால்: இந்தூர் பிசினஸ்மேன் ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கொலை செய்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பல டிரெண்டாகி வருகிறது.
மேகாலயாவில் தேனிலவுக்குச் சென்ற இடத்தில் தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சோனம் ரகுவன்ஷி, திருமணமான மூன்றாவது நாளே தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்யத் திட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி
சோனம் தனது காதலன் ராஜ் குஷ்வாஹாவுடன் நடத்திய உரையாடலில், என் கணவர் என்னுடன் நெருக்கமாக இருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியதாக போலீசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கணவர் கொலை செய்யப்பட்ட பிறகு தலைமறைவாக இருந்த சோனம், உத்தரபிரதேசத்தின் காசிப்பூரில் திங்களன்று சரணடைந்தார். திருமணத்திற்கு முன்பே ரகுவன்ஷியிடம் சரியாக பேசாமல்.. தன்னை விலக்கிக் கொண்டதாகவும், திருமணமான மூன்று நாட்களிலேயே பிறகு தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
கொலைக்கான காரணம் குறித்து பேசிய அதிகாரிகள், "அவருக்கு திருமணம் பிடிக்கவில்லை.. இதனால் கணவர் ராஜா கொலை செய்யப்பட வேண்டும் என்று சோனம் விரும்பியதால், தொலைதூர இடத்தைத் தேர்ந்தெடுத்து இந்தக் கொலையைச் செய்துள்ளார்" என்று தெரிவித்தனர்.
வழக்கின் பின்னணி
சோனமுக்கும், ராஜாவுக்கும் இந்தூரில் மே 10ஆம் தேதி திருமணம் நடந்தது. மே 21ஆம் தேதி மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றனர். ராஜா கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு சோனம் காசிப்பூரில் சரணடைந்தார். ஹனிமூன் சென்ற இடத்தில், ராஜா செராபுஞ்சி அருகே உள்ள ஒரு மலைப்பகுதி காட்டில் ஆழமான பள்ளத்தாக்கில் இறந்து கிடந்தார். அவரை காணவில்லை என்று கொடுக்கப்பட்ட புகாரில்.. உள்ளூர் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கினர். இருவரும் காணாமல் போனதாக முதலில் தெரிவிக்கப்பட்டது.
ராஜாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஷில்லாங் காவல்துறை தெரிவித்தது. இது விபத்து அல்லது வேறு ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியது. உத்தரபிரதேச காவல்துறையிடம் சோனம் சரணடைந்த பின்னர், ராஜாவை கொலை செய்ய கூலிப்படையை ஏவியதாக ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் சோனமுடன் தொடர்பில் இருந்த ராஜ் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ராஜ் உடன் இருந்த காதல் காரணமாகவே இந்த கொலையை செய்ததாக சோனம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவி சோனம் கொலை செய்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பல டிரெண்டாகி வருகிறது. இவர்கள் இருவரும் சந்தோசமாக நிறைய ரீல்ஸ் போட்டுள்ளனர்.
ஒன்றாக நிறைய காமெடி ரீல்ஸ் , டிரெண்டிங் பாடல்களுக்கு ரீல்ஸ் போட்டுள்ளனர். வெளியே சந்தோசமாக இருப்பதாக காட்டிக்கொண்டு லைக்ஸ் அள்ளிய சோனம்.. தனது கணவரை திட்டமிட்டு படுகொலை செய்ததை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
A happy wedding with Nightmare ending pic.twitter.com/0k0jtsEVL6
— Hindutva Knight (@HPhobiaWatch) June 9, 2025
யாரெல்லாம் கைது
ராஜ்ஜை தவிர, ராஜாவைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மற்ற மூன்று பேர் ஆகாஷ் ராஜ்பூட், விகாஸ் என்கிற விக்கி மற்றும் ஆனந்த் ஆவர். நேற்று வெளியான உடற்கூறு ஆய்வறிக்கையில், ராஜாவின் உடலில் பல வெட்டு காயங்கள் இருந்ததாகவும், தலையின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் இரண்டு பெரிய காயங்கள் இருந்ததாகவும் உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் மற்றும் சதித்திட்டங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications