அழகான வேட்பாளர்.. நடிகையுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர்கள்.. மேடை சரிந்து விபத்து
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார மேடையில் நடிகையுடன் செல்பி எடுப்பதற்காக ரசிகர்கள் அதிக அளவில் ஏறியதால் மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மக்களவை தேர்தல் 6ம் கட்ட மற்றும் 7 கட்டமாக நாட்டில் மேற்கு வங்கம், அரியானா, டெல்லி மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் மக்களவை தேர்தல் அதிக இடங்களை வெல்லும் நோக்கில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அங்கு பாஜக, இடதுசாரிகளுடன் திரிணாமுல் காங்கிரஸ் இந்த முறை கடும் போட்டியை சந்தித்து உள்ளது. இதன் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நடிகர் நடிகைகளை வேட்பாளராக நிறுத்தி உள்ளதோடு, தேர்தல் பிரச்சாரத்திலும் இறக்கிவிட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகனுக்கு பெயர் சூட்டியது அரச குடும்பம்.. என்ன பெயர் தெரியுமா?
மேற்கு வங்க மாநிலத்தின் பிரபல நடிகையான நுஸ்ரத் ஜஹான் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் பஷிரத் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கோபிபல்லாபூர் பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிர்பாஹா சோரனை ஆதரித்து நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக மேடையில் நடிகை நுஸ்ரத் ஜஹான் அமர்ந்திருந்தார்.
அப்போது அவரை பார்க்கும் ஆர்வத்தில் ஏராளமான ரசிகர்கள் மேடையில் ஏறினார்கள். அவருடன் வளைத்து வளைத்து ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அளவுக்கு அதிகமானோர் ஏறியதால் மேடை திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் நடிகை நுஸ்ரத் ஜஹான் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவத்தால் கோபிபல்லாபூரில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.