மே.வங்கம்: ''திரிணாமுலுக்கு ஓட்டுப்போட்டால் பா.ஜ.க.வுக்கு விழுகிறது''.. திரிணாமுல் வேட்பாளர் புகார்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 3-வது கட்டமாக 31 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு படையினர் பஜகவுக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கூறுவதாக திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
பல வாக்குச்சாவடிகளில் மக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களித்தால் அது பா.ஜ.க.வுக்கு பதிவாகிறது என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல்
மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 27-ந் தேதி முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கும், கடந்த 1-ந் தேதி 2-வது கட்டமாக 31 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. முதல் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலில் பரபரப்பு உண்டானது.

மம்தா தொகுதியில் பதற்றம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் மம்தா ஓட்டு போட வந்தபோது சிலர் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். 'பீகார், உத்தர பிரதேசத்தில் இருந்து குண்டர்களை கொண்டு வந்து மக்களை ஓட்டு போட முடியாமல் அச்சுறுத்துவதாகவும், பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மம்தா பானர்ஜி பகீர் குற்றம்சாட்டினார். மேலும் மாநில கவர்னரிடமும் போன் செய்து புகார் தெரிவித்தார் மம்தா பானர்ஜி.

இன்று வாக்குப்பதிவு
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் 3-வது கட்டமாக 31 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மக்கள் ஆர்வமுடன் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜகவுக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் பாதுகாப்பு படையினர் கூறுவதாக அரம்பாக்கம் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் சுஜாதா மொண்டல் தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினர் மீது குற்றச்சாட்டு
இது தொடர்பாக அவர் கூறுகையில், ' பல இடங்களில் திரிணாமுல் காங்கிரசுக்கு சூழ்நிலை நன்றாக இருக்கிறது. வாக்குச்சாவடி 45-ல், மக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களித்தால் அது பா.ஜ.க.வுக்கு பதிவாகிறது. அரண்டி பகுதியில் திரிணாமுல் தொண்டர்கள் பாஜகவினரால் தாக்கப்பட்டனர். வாக்குச்சாவடியில் பாதுகாப்புக்கு நிற்கும் மத்திய படைகள், பா.ஜ.க.வுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கூறுகிறார்கள்' என்கிறார்.

தேர்தல் ஆணையத்திடம் புகார்
இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் மீது பா.ஜ.க.வும் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பாக தெற்கு 24 பர்கானாஸ் டயமண்ட் ஹார்பரைச் சேர்ந்த பா.ஜ.க வேட்பாளர் தீபக் ஹல்தார் கூறுகையில், 'தாகிரா பதுல்தங்காவில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் திரிணாமுல் குண்டர்கள் மக்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன் என்றார். பதற்றம் உருவாகுவதை தவிர்க்க வாக்குபதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications