இந்திய-சீனா எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு திரிணாமுல் காங். நோட்டீஸ்!
இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து நாளை ராஜ்யசபாவில் விவாதிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து நாளை ராஜ்யசபாவில் விவாதிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 11-ம் தேதி வரை நடக்க இருக்கிறது.

காங்கிரஸ் தலைமையில் அணி வகுத்துள்ள 18 எதிர்க்கட்சிகள், ஜிஎஸ்டி வரி விதிப்பு, சீன எல்லை பிரச்னை, காஷ்மீர் கலவரம், ஜிஎஸ்டி வரியின் தாக்கம், மாட்றைச்சிக்கு தடை, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து நாளை ராஜ்யசபாவில் விவாதிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாளை ராஜ்யசபா அலுவல்களை ஒத்திவைத்து சீன பிரச்சனை பற்றி விவாதிக்க திரிணாமுல் காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications