முத்தலாக் சட்டத்திற்கு பிறகு முஸ்லிம் பெண்கள் கோரிக்கை இதுதான்!

பலதார திருமணத்தையும் மத்திய அரசு அரசு தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    முத்தலாக் சட்டத்தை வரவேற்ற முஸ்லீம் பெண்களின் அடுத்த கோரிக்கை

    டெல்லி: பலதார திருமணத்தையும் மத்திய அரசு அரசு தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இஸ்லாமியப் பெண்களின் திருமண பாதுகாப்பு உரிமையை காக்கும் வகையில் மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த தடைச் சட்டம் நேற்று முன்தினம் லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

    முத்தலாக் தடைச்சட்டத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பிரிவு சேர்க்கப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது உள்நோக்கம் கொண்டது என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    முத்தலாக் தடைசட்டத்திற்கு வரவேற்பு

    முத்தலாக் தடைசட்டத்திற்கு வரவேற்பு

    இந்நிலையில் இஸ்லாமியர்களின் பழங்கால முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் போரிட்டு வந்த இஸ்லாமியப் பெண்கள் மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    புதிய ஆரம்பம் என புகழாரம்

    புதிய ஆரம்பம் என புகழாரம்

    இந்த தடைச்சட்டம் ஒரு புதிய ஆரம்பம் என்றும் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். மேலும் இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமி கணவர்கள் தங்களின் மனைவிகளுக்கு தலாக் சொல்வதை தடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    முத்தலாக்கை விட மோசமானது

    முத்தலாக்கை விட மோசமானது

    மத்திய அரசின் இந்த புதிய சட்டம் இஸ்லாமிய ஆண்களின் பலதார திருமணத்தை தடை செய்யும் வகையில் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பலதார திருமணம் முத்தலாக்கை விட மோசமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தடை செய்யப்பட வேண்டும்

    தடை செய்யப்பட வேண்டும்

    2வதும் பெண் குழந்தையாக பிறந்ததால் கணவர் போனிலேயே தலாக் சொல்லி விவாகரத்து செய்ததால் பாதிக்கப்பட்ட ரைசா என்ற பெண் மத்திய அரசின் இந்த சட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பலதார திருமணமும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    நடைமுறையில் உள்ள பலதாரமணம்

    நடைமுறையில் உள்ள பலதாரமணம்

    பலதார திருமணத்தால் பாதிக்கப்பட்ட ரிஸ்வானா என்ற பெண் கூறுகையில் மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் பலதார திருமணம் இன்னும் இஸ்லாமியர்களிடையே நடைமுறையில் உள்ளது.

    முத்தலாக் மட்டும் உதவாது

    முத்தலாக் மட்டும் உதவாது

    அதனையையும் அரசு தடை செய்ய வேண்டும். முத்தலாக் தடைசட்டம் மட்டும் பெண்களுக்கு உதவியாக இருக்காது என்றும் பலதார திருமணத்தால் பாதிக்கப்பட்ட ரிஸ்வானா என்ற பெண் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+