மூன்று ஊழியர்கள் கொலை- திரிபுரா பத்திரிக்கை ஆசிரியர் குற்றவாளி: கோர்ட் தீர்ப்பு!!

திரிபுராவில் வெளிவரும் நாளேடு டெய்னிக் கன்தூத். இந்நாளேட்டில் பணிபுரிந்து வந்த மேலாளர் ரஞ்சித் சவுத்ரி, ப்ரூஃப் ரீடர் சுஜித் பட்டாசார்ஜி, ஓட்டுநலர் பலராம் கோஷ் ஆகியோர் கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை சம்பவத்தின் போது உரிமையாளரும் ஆசிரியருமான சுஷில் சவுத்ரியும் அலுவலகத்தில்தான் இருந்திருக்கிறார்.
ஆனால் தமது அலுவலகம் மீது வெளியாட்கள் தாக்குதல் நடத்தி மூவரையும் கொலை செய்துவிட்டதாக போலீசில் புகார் செய்தார் சுஷில் சவுத்ரி. அத்துடன் கொலையாளிகள் பற்றிய தகவல் தருவோருக்கு ரூ10 லட்சம் சன்மானம் தருவேன் என்றும் அறிவித்தார்.
சுஷில் சவுத்ரி அலுவலகத்தில் இருக்கும் போதே கொலைகள் நடந்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். கடைசியாக சுஷில் சவுத்ரியின் நில மோசடிகளை அம்லப்படுத்துவேன் என்று மேலாளர் மிரட்டியதால் அவர் கொல்லப்பட்டார்; அவர் கொலை செய்யப்படுவதை பார்த்ததால் ப்ரூஃப் ரீடர் கொலை செய்யப்பட்டார். பின்னர் சாட்சியாக இருந்த ஓட்டுநர் பலராம் கோஷையும் சுஷில் சவுத்ரி கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி சுஷில் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர். கொல்லப்பட்ட ஓட்டுநர் பலராம் கோஷுவின் மனைவி நியாதியும் அப்ரூவர் ஆகி உண்மையை விளக்கினார்.
இந்த வழக்கில் நேற்று அகர்தலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்று ஊழியர்கள் கொலை வழக்கில் டெய்னிக் கன்தூத் அதிபர் சுஷில் சவுத்ரி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை நாளை மறுநாள் அறிவிக்கப்பட இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications