Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரிபுராவில் இழுபறி.. நெருங்கி வந்த கம்யூனிஸ்ட்.. பாஜகவிற்கு சிக்கல்? ஜீ எக்சிட் போல் கணிப்பு!

திரிபுராவில் இழுபறி நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

Subscribe to Oneindia Tamil

அகரத்தலா: திரிபுராவில் பாஜக ஆட்சி நிலவி வரும் நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் அங்கே போட்டி கடுமையாக இருக்கும் என்று ஜீ நியூஸ் - மெட்ரீஸ் நிறுவன கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்படலாம் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திரிபுராவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2018 தேர்தலில் திரிபுராவில் 44 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

பாஜக ஆட்சி அமைத்து அங்கு பிப்லாப் குமார் ஆட்சி அமைத்த நிலையில் கடந்த வரும் அவர் மாற்றப்பட்டார். இவரை அடுத்து பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா முதல்வராக நியமிக்கப்பட்டார். தேர்தலை மனதில் வைத்து மாணிக் சாகா அங்கே பாஜகவால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இங்கே மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும்.

மாணிக் சர்க்கார்

மாணிக் சர்க்கார்

2018ல் மாணிக் சர்க்காரின் 4 முறை ஆட்சிக்கு முடிவு கட்டி அங்கே பாஜக ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி திரிபுரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. மாணிக் சர்க்கார் ஆட்சிக்கு நாடு முழுக்க நல்ல பெயர் இருந்தும் கூட இளைஞர்கள் அவருக்கு எதிராக வாக்களித்ததால் அங்கே பாஜக ஆட்சியை பிடித்தது. இளம் தலைமுறை வாக்காளர்கள் இடையே பாஜக பெற்றமதிப்பு, பிரபலம் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தது. சிபிஐ - சிபிஎம் சரியாக பிரச்சாரம் செய்யாததும் இதற்கு காரணமாக இருந்தது. முக்கியமாக இளைஞர்களை கவர அங்கே பாஜக தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டது. வாட்ஸ் ஆப் தொடங்கி பல்வேறு சமூக வலைத்தளங்கள் வழியாக பாஜக பிரச்சாரங்களை செய்ததன் மூலம் 2018ல் ஆட்சியை பிடித்தது.

பிப்லாப்

பிப்லாப்

இதையடுத்து அங்கு பிப்லாப் குமார் தேவ் முதல்வராக பதவி ஏற்றார். இவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கடந்த வருடம் மே மாதம் மாணிக் சாகா முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் திரிபுரா பாஜக ஆட்சி நிலவி வரும் நிலையில், அங்கே போட்டி கடுமையாக இருக்கும் என்று ஜீ நியூஸ் - மெட்ரீஸ் நிறுவன கருத்து கணிப்பு தெரிவித்து உள்ளது. திரிபுராவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2018 தேர்தலில் திரிபுராவில் 44 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

மெஜாரிட்டி

மெஜாரிட்டி

பாஜக 29-36 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அங்கே மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும். பாஜக ஒருவேளை 31 இடங்களை அதற்கு மேல் வென்றால் ஆட்சியை பிடிக்கும். ஆனால் 29 என்ற நிலைக்கு சென்றால் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்படும் என்று கணிப்பு தெரிவிக்கிறது. கருத்து கணிப்பில் இரண்டிற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இதனால் அங்கே ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படலாம்.

இடதுசாரிகள்

இடதுசாரிகள்

அதாவது இழுபறி ஏற்படலாம் என்று கணிப்பு தெரிவிக்கிறது. இடதுசாரிகள் கூட்டணி 13-21 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.மற்ற காட்சிகள் எதுவும் அங்கே வெல்ல வாய்ப்பு இல்லை என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. அதனால் அங்கே தேர்தலுக்கு பின் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+