For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிசோரமில் இருந்து 11 பேரை கடத்திய திரிபுரா தீவிரவாதிகள்!

By Mathi
Google Oneindia Tamil News

அகர்தலா: மிசோரம் மாநிலத்தில் இருந்து 11 கட்டுமான தொழிலாளர்களை திரிபுரா தீவிரவாதிகள் கடத்திச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தென் அஸ்ஸாமின் கரிம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் திரிபுரா- மிசோரம் எல்லையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை ஆயுதம் தாங்கிய திரிபுரா தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட அவரும் வங்கதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது, கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதியும் 3 திரிபுரா வர்த்தகர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்று பின்னர் விடுவித்தனர்.

இந்த கடத்தலில் திரிபுரா தனிநாடு கோரும் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி என்ற இயக்கத்தினரே ஈடுபட்டிருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
Militants have kidnapped 11 persons from Mizoram along the inter-state border with Tripura, the police said on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X