மான் வேட்டையாடிய வழக்கில் ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு.. சல்மான்கானுக்கு மீண்டும் சிக்கல்
மான் வேட்டையாடிய வழக்கில் விடுவிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளதால் அவருக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக மான்கள் வேட்டையாடிய வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் அவர் மீண்டும் சிக்கலில் தவித்து வருகிறார்.
18 வருடத்துக்கு முன்பு மான்கள் வேட்டையாடியதாக தொடரப்பட்ட இரு வழக்குகளில் இருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை விடுவித்து ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனை எதிர்த்து அந்த மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை ஏற்றுக்கொண்டு சல்மான் கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், தற்போது மீண்டும் சல்மான் கானுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
நடிகர் சல்மான்கான் 2 மான்களை வேட்டையாடி கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதாவது கடந்த 1998 செப்டம்பர் 26, 28-ம் தேதிகளில் முறையே ஜோத்பூர் பாவத்திலும், கோதா பண்ணையிலும் இரண்டு மான்களை படப்பிடிப்பின்போது வேட்டையாடி கொன்றதாக கூறப்பட்டது.
இந்த வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் சல்மான்கானுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால், சல்மான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் அந்த வழக்குகளில் இருந்து அவரை குற்றமற்றவர் எனக் கூறி ஜுலை மாதம் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக ராஜஸ்தான் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனு நீதிபதிகள் பானுமதி, ஏ.கே.சிக்கிரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் சல்மான் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
மேலும், இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications