மான் வேட்டையாடிய வழக்கில் ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு.. சல்மான்கானுக்கு மீண்டும் சிக்கல்
மான் வேட்டையாடிய வழக்கில் விடுவிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்துள்ளதால் அவருக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக மான்கள் வேட்டையாடிய வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை ஏற்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் அவர் மீண்டும் சிக்கலில் தவித்து வருகிறார்.
18 வருடத்துக்கு முன்பு மான்கள் வேட்டையாடியதாக தொடரப்பட்ட இரு வழக்குகளில் இருந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை விடுவித்து ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனை எதிர்த்து அந்த மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை ஏற்றுக்கொண்டு சல்மான் கானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், தற்போது மீண்டும் சல்மான் கானுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
நடிகர் சல்மான்கான் 2 மான்களை வேட்டையாடி கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதாவது கடந்த 1998 செப்டம்பர் 26, 28-ம் தேதிகளில் முறையே ஜோத்பூர் பாவத்திலும், கோதா பண்ணையிலும் இரண்டு மான்களை படப்பிடிப்பின்போது வேட்டையாடி கொன்றதாக கூறப்பட்டது.
இந்த வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் சல்மான்கானுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால், சல்மான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் அந்த வழக்குகளில் இருந்து அவரை குற்றமற்றவர் எனக் கூறி ஜுலை மாதம் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக ராஜஸ்தான் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அந்த மனு நீதிபதிகள் பானுமதி, ஏ.கே.சிக்கிரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் சல்மான் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினர்.
மேலும், இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications