Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகா. சிங்னாப்பூர் சனிபகவான் கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்கள் தடுத்து நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிங்னாப்பூர் சனிபகவான் கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மகராஷ்டிரம் மாநிலம் அகமதுநகர் மாவட்டம் சிங்னாப்பூரில் உள்ள பழைமை வாய்ந்த சனிபகவான் கோயிலுக்குள் பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கபாடிருந்தது. இத்தடையை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் நீலிமா வர்டாக், சமூக ஆர்வலர் வித்யா பால் ஆகியோர் பொது நல மனு தாக்கல் செய்தனர்.

Trupti Desai stopped from entering Shani Shingnapur Temple despite HC order, detained

இந்த மனுவை விசாரணை செய்த மும்பை உயர் நீதிமன்றம், கோயில்களுக்குள் வழிபாடு நடத்துவதற்காக உள்ளே செல்வது, பெண்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையாகும். இந்த அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டியது, அரசின் கடமையாகும்.

இதனை உறுதிப்படுத்தும் 1956ஆம் ஆண்டு மகாராஷ்டிர ஹிந்து மத வழிபாட்டு இட சட்டப் பிரிவுகளை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மகாராஷ்டிர அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து இன்று சிங்னாப்பூர் கோயிலுக்குள் திருப்தி தேசாய் தலைமையிலான பெண்கள் சென்றனர். ஆனால் அவர்களை புனித நடைமேடை பகுதிக்குள் அனுமதிக்க கோயில் அலுவலர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அந்த பெண்கள் அனைவரையும் போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் கோயிலுக்குள் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+