பிடி பருத்தி விதைகளை அறிமுகம் செய்து விவசாயிகளின் தற்கொலைக்கு பொறுப்பேற்ற டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்
நாட்டில் விவசாயிகள் தற்கொலைக்கு காரணமான பிடி பருத்தி விதைகளை அறிமுகம் செய்தவர்தான் மறைந்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்.
Recommended Video

டெல்லி: மறைந்த மத்திய அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தாம் மத்திய ஜவுளித்துறை அமைச்சக செயலாளராக பதவி வகித்த காலத்தில்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை நாட்டுக்கு அறிமுகம் செய்தார். இந்த பிடி பருத்தி விதைகள் பலன் தராமல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்ய நேரிட்ட போது இம் மரணங்களுக்கு பொறுப்பேற்பதாகவும் கூறியவர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்.
தமிழகத்தின் தஞ்சையை பூர்வீகமாக கொண்டவர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன். 1961-ம் ஆண்டு உத்தரப்பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்தார்.
1990-ல் மத்திய ஜவுளித்துறை அமைச்சக செயலாளராகவும் இருந்தார். அப்போதுதான் நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிடி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

விவசாயிகள் தற்கொலை
ஆனால் இப்பருத்தி விதைகள் பலன் தரவில்லை. மாறாக விளைநிலங்களை மலடாக்கியது. இதனால் நாடு முழுவதும் பல நூறு விவசாயிகள் தற்கொலை செய்ய நேரிட்டது.

மரணங்களுக்கு பொறுப்பேற்பு
பின்னர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை நாட்டுக்கு அறிமுகம் செய்தது நானே.. அதனால் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு நானே பொறுப்பு என பகிரங்கமாக பேசினார்.

சர்ச்சையான புதிய கல்வி கொள்கை குழு
அதேபோல் கடும் சர்ச்சைக்குள்ளான மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவின் தலைவராகவும் இருந்தார் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் கபிசிபல், இக்குழுவை விமர்சித்தார்.

கபில் சிபல் மீது தாக்கு
இதற்கு பதிலளித்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன், கபில் சிபலுக்கு ராகுல் காந்தியை பாதுகாக்கவே நேரமில்லையே என விமர்சித்ததும் சர்சையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications