திருப்பதி: பக்தர்கள் தங்கும் விடுதிகளில் டெபாசிட் கட்டணம் அதிகரிப்பு
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளுக்கான ‘டெபாசிட்' கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தேவஸ்தனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான மத்திய வரவேற்பு மைய அதிகாரிகள் வெங்கட்டய்யா, தாமோதரம் ஆகியோர் தெரிவித்துள்ள விவரங்கள் வருமாறு:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பக்தர்கள் தங்குவதற்காக திருமலை, திருப்பதியில் தேவஸ்தானம் சார்பில் 7 ஆயிரம் விடுதி அறைகள் உள்ளன. அத்துடன் இலவச விடுதிகளும் உள்ளன. இதுதவிர ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.250 கட்டணத்திலும் தங்கும் விடுதிகள் உள்ளன.
மேற்கண்ட கட்டணத்தில் உள்ள தங்கும் விடுதி அறைகளுக்கான டெபாசிட் தொகையாக பக்தர்களிடம் இருந்து ரூ.350 வசூலிக்கப்படுகிறது. அறைகளை காலி செய்யும்போது டெபாசிட் தொகை பக்தர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும். ஆனால், பக்தர்கள் பலர் டெபாசிட் தொகையை திரும்ப பெறாமலும், அவர்கள் தங்கியிருந்த விடுதி அறைகளின் பூட்டு, சாவியை தேவஸ்தான அலுவலகத்தில் ஒப்படைக்காமலும் சென்று விடுகின்றனர்.
மேலும் அறைகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி விடுகின்றனர். சிலர் அறையை பூட்டி விட்டு சாவியை மட்டும் எடுத்து சென்று விடுகின்றனர். சிலர் அறையின் சாவியை தொலைத்து விடுகிறார்கள். இதனால், தேவஸ்தான விடுதி ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.
மேற்கண்ட பிரச்சினைகளை சமாளிக்க விடுதி அறைக்கான டெபாசிட் தொகையை அதிகரிக்க தேவஸ்தான மத்திய வரவேற்பு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தேவஸ்தான உயர் அதிகாரிகள் அனுமதியோடு வருகிற 15-ந் தேதி முதல் விடுதி அறைகளுக்கான கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. விடுதி அறைகளின் குறைந்த பட்ச டெபாசிட் தொகை ரூ.500 ஆக உயருகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications