இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் டிடிவி தினகரன்
டெல்லி: சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது நண்பரான மல்லிகார்ஜுனா என்வரும், உடந்தையாக இருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பிறகு கோர்ட்டில் அவர்களை ஆஜர்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

எனவே டெல்லியிலுள்ள ஒரு கோர்ட்டில் இன்று மதியம் 2 மணியளவில் தினகரனையும், மல்லிகார்ஜுனாவையும் போலீசார் இன்று ஆஜர்படுத்துவார்கள். இதன்பிறகு, போலீஸ் காவலில் எடுத்து அவர்களை விசாரணை செய்ய கோர்ட் அனுமதியை கோருவார்கள் என தெரிகிறது.
கோர்ட் போலீஸ் காவல் விதிக்கிறதா, அல்லது, நீதிமன்ற காவலில் விசாரிக்க அனுமதிக்கிறதா என்பது இன்று தெரிந்துவிடும். காவல் விதிக்கப்பட்டால் தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications