ஜாமீன் கிடைக்குமா? இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார் டிடிவி தினகரன்!
இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்ப்பட்டுள்ள டிடிவி தினகரன் இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளார்.
டெல்லி: இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்ப்பட்டுள்ள டிடிவி தினகரன் இன்னும் சற்றுநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படவுள்ளார். அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் குற்றப்பிரிவு போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயையும் டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரன் மீது, டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த சனிக்கிழமை முதல் நான்கு நாட்களாக 37 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

ஒரே அறையில் விசாரணை
அப்போது சுகேஷும், டிடிவி தினகரனும் ஒருவரை ஒருவர் தெரியாது என கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே அறையில் இருவரிடமும் நேருக்கு நேராக விசாரணை நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
இதைத்தொடர்ந்து நள்ளிரவு டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் தினகரனை கைது செய்தனர். டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

ஜாமீன் கோர முடிவு
இன்று பிற்பகம் 2 மணி அளவில் தினகரன் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்றும் அந்த சமயத்தில் தினகரனின் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்
ஆனால் தினகரன் செல்வாக்கு உடையவர் என்பதால் அவர் சாட்சிகளை கலைக்க என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் டிடிவி தினகரன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications