‘சரக்கு’ அடிப்பதற்கு பதில் லைட்டை ஆப் செய்து விட்டு ஜூஸ் குடியுங்கள்.. சொல்கிறார் நிதிஷ்குமார்
பாட்னா: அறைக்குள் விளக்குகளை அணைத்து விட்டு ஜூஸ் குடித்துப் பாருங்கள், அதுவும் 'சரக்கு' மாதிரி தான் இருக்கும், உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாது என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்த நிதிஷ்குமார், தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல், மாநிலம் முழுவதும் முழு மதுவிலக்கை கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளார். மேலும், அண்டை மாநிலத்தில் இருந்து மதுக்கடத்தலை தடுக்க பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சட்டத்திற்கு புறம்பாக மதுவை பீகாரில் கொண்டு வருபவர்களுக்கு சிறைதண்டனை வழங்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு அமலுக்கு வந்த பிறகு கள்ளச்சாராயம் குடித்து சிலர் உயிரிழந்தனர். எனினும், நிதிஷ்குமார் அரசு தளரவில்லை. கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறையில் சிறப்பு குழுவினரை அமைத்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், பாட்னாவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார் கூறுகையில், ''மதுவிலக்கை அமல்படுத்திய போது எனக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மனதிருப்தியும், மனநிறைவும் ஏற்பட்டிருக்கிறது. மது குடிப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை, ஆனால் உடல் நலத்தை கெடுக்கும் மதுவை ஏன் தான் குடிக்கிறீர்கள்? உடல்நலத்தை கெடுக்கும் மது தேவைதானா? போதை வேண்டுமா?
அறைக்குள் சென்று விளக்குகளை அணைத்து விட்டு ஜூஸ் குடித்து பாருங்கள், அதுவும் மதுவை குடித்த உணர்வு தான் தரும் என்றார். இதைக் கேட்டு நிறுபர்கள் சிரித்தனர். மதுவிலக்கு நாடு முழுவதும் ஏற்படுத்த மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications