For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குறை சொல்ல வந்த 20 பெண்களைத் தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது போலீசில் புகார்

Google Oneindia Tamil News

டெல்லி: புகார் கொடுக்க வந்த தங்களைத் தாக்கியதாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது 20 பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வான மனோஜ் குமார் அலுவலகத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் சாலை வசதி குறைபாடு மற்றும் குடிநீர் பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்க சென்றுள்ளனர். ஆனால்,அப்பெண்களை உள்ளே விட எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறுத்ததாகவும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நேராக நியூ அசோக் போலீஸ் நிலையத்திற்கு சென்ற அப்பெண்கள் எம்.எல்.ஏ. மனோஜ் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

புகாரை அடுத்து மனோஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

English summary
A group of women lodged a molestation and assault complaint against Aam Aadmi Party (AAP) MLA Manoj Kumar on Saturday evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X