மத்திய பிரதேசத்தில் எரிவாயு ஏற்றி சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது- மீட்பு பணிகள் தீவிரம்
ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஒடிஷாவின் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 288 பேர் பலியாகினர். உலகை உலுக்கிய இந்த கோர ரயில் விபத்து துயரம் இன்னமும் தொடருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் எரிவாயு ஏற்றி சென்ற சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அப்பகுதியில் ரயில் சேவைகளில் பாதிப்பும் ஏற்படவில்லை. ஜபல்பூர் பகுதியில் ரயில் பெட்டிகள் தடம் புரண்ட இடத்தில் மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications