ஜுனைத் கொலை வழக்கில் டெல்லி அரசு ஊழியர் உட்பட 4 பேர் கைது
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜுனைத் கான் கொலை வழக்கில் டெல்லி அரசு ஊழியர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சண்டிகர்: டெல்லி-மதுரா ரயிலில் இஸ்லாமிய சகோதரர்களை வசைபாடி ஜுனைத் என்ற 17 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்தில் டெல்லி அரசு ஊழியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜுனைத் கான் கொலை வழக்கில் உணவு இன்ஸ்பெக்டரான இன்னொரு அரசு ஊழியர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் இன்னமும் அவர் கைது செய்யப்படவில்லை.

ஹரியானா போலீஸ் ரமேஷ் என்ற ஒருவரை சம்பவம் நடந்து முடிந்த பிறகு கைது செய்தது. கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் ஜுனைத்தையும் அவரது சகோதரரையும் பசு மாமிசம் உண்பவர் என்றும் தேச விரோதி என்றும் திட்டியதோடு கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
ஆனால் ஜுனைத்தையும் அவரது சகோதரரையும் கத்தியால் குத்திய அந்த நபர் இன்னமும் போலீசாரிடம் பிடிபடவில்லை. இதனால் அவரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் குதித்துள்ளனர்.
ரயிலில் பயணம் செய்த பயணிகளில் ஒருவர் கூட இதில் சாட்சி சொல்ல முன்வரவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். இதனால் கொலையாளியைக் கண்டுபிடிப்பது போலீசுக்கு கடினமாகியுள்ளது.
ஜுனைத் கொலை நாடு முழுவதும் எதிர்ப்பலைகளை கிளப்பியுள்ளது. இதனால், கும்பல் சேர்ந்து தாக்கி, சிறுபான்மை மக்களைக் கொலை செய்வதற்கு எதிராக 'நாட் இன் மை நேம்' என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "ஜுனைத் கொலை சம்பவம் மிகவும் வேதனையை அளிக்கிறது, வெட்கக் கேடானது" என்று வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications