டெல்லியில் பர்த்டே பார்ட்டியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 நண்பர்கள்
டெல்லி: டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த கையோடு 18 வயது பெண் மைனர் உள்பட 2 நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநலம் தெற்கு 24 பார்கனாஸைச் சேர்ந்த இளம்பெண் தனது தோழியுடன் டெல்லிக்கு வந்தார். தாய் தந்தை இல்லாத அந்த பெண் உறவினர்களால் வளர்க்கப்பட்டார். அவர் கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அந்த பெண் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்று இரவு அவரது ஆண் நண்பர் மோதி பாகில் உள்ள அவரது வீட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அந்த வாலிபர் அப்பெண்ணின் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பார்ட்டியில் அப்பெண் மது அருந்தியுள்ளார்.
பிற நண்பர்கள் கிளம்பிய பிறகு பார்ட்டிக்கு அழைத்த வாலிபர் மற்றும் ஒரு மைனர் ஆகியோர் குடிபோதையில் இருந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த பெண் மறுநாள் காலை போலீசில் இது குறித்து புகார் செய்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர். இதற்கிடையே அந்த பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.












Click it and Unblock the Notifications