உற்ற தோழியை ஆபாச புகைப்படம் எடுத்து நெட்டில் விட்ட இரண்டு இளம்பெண்கள் கைது!
லக்னோ: உத்திரபிரதேசத்தில் தோழியின் ஆபாச புகைப்படங்களை இணையதளங்களில் பரப்பிய இரண்டு பெண்கள் போலீசாரார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் தங்களது ஆண் நண்பரை வைத்து தங்களது தோழியின் ஆபாசப் படங்களை வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவ்விரு இளம்பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பரேலி மாவட்டத்தில் வசித்துவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கடந்த வாரம் அளித்த புகாரையடுத்து விசாரணை நடத்திவந்த ஷெர்கர் பகுதி போலீசார், அந்த இளம்பெண்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேற்கண்ட ஆபாச எம்.எம்.எஸ். குறுந்தகவலை பரப்புவதில் துணையாக இருந்த அந்தப் பெண்களின் ஆண் நண்பரை போலீசார் தேடிவருகின்றனர். எதற்காக தங்களுடைய தோழியையே அப்பெண்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக இதனைச் செய்தனர் என்பதனை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.