8 பேர் பலியான பாட்னா மோடி பொதுக்கூட்ட குண்டுவெடிப்பு: உ.பியில் 2 தீவிரவாதிகள் கைது
டெல்லி: பாட்னாவில் நடைபெற்ற பாஜக பிரதம வேட்பாளர் மோடியின் பொதுக்கூட்ட மைதானத்தில் குண்டுவெடித்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.

பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அம்மைதானத்திலும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், தீவிரவாதிகள் உட்பட 8 பேர் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதன் வழக்கு விசாரணை, தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகளை உத்திரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் பெயர் பக்ருதீன் மற்றும் அகமது என்றும், இவர்கள் பாட்னா குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தவர்கள் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications