இரட்டை இலை: ஓபிஎஸ்- சசி அணிகளுக்கு ஜூன் 16 வரை தேர்தல் ஆணையம் அவகாசம்
இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அதிமுகவின் இரு அணிகளுக்கும் ஜூன் 16ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க சசிகலா, பன்னீர்செல்வம் அணிகளுக்கு ஜூன் 16ம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உரிய ஆவணங்கள் அளிக்க இரு அணிகளும் அவகாசம் கேட்டு இருந்தனர். இதை அடுத்து அவர்களுக்கு அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என செயல்பட்டு வருகின்றனர்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என ஓ.பி.எஸ் அணியினர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

இரட்டை இலை சின்னம்
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் சொந்தம் என இருதரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுகின. இது குறித்தும் விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், அதிமுக கட்சியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கி வைத்தது. ஏப்ரல் 17ஆம் தேதி இருதரப்பினரும் இரட்டை இலை சின்னம் குறித்த உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

ஆவணங்கள் தாக்கல்
இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பினர், சுமார் 40 லட்சம் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர். ஆனால் சசிகலா தரப்பினர் ஆவணங்களை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வந்தனர்.

அவகாசம் கேட்டு மனு
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனக் கூறி சசிகலா தரப்பு சார்பில், தேர்தல் ஆணையத்திடம் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஜூன் 16 வரை அவகாசம்
சசிகலாவின் மனுவை ஏற்ற தேர்தல் ஆணையம் , இரு அணிகளும் போதிய ஆவணங்களை தாக்கல் செய்ய ஜூன் 16ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications