18 வயது பெண்ணை சகோதரர் கண் முன்பு சீரழித்து வீடியோ எடுத்த பஞ். தலைவர் உள்பட 2 பேர்
பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 வயது பெண் பஞ்சாயத்து தலைவர் உள்பட 2 பேரால் பட்டப்பகலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவர்கள் அந்த கொடூரச் செயலை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள தாகியா கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணின் சகோதரர் மற்றும் ஒன்றுவிட்ட சகோதரர் ஆகியோர் காலையில் வேலைக்கு சென்றுள்ளனர்.

வேலைக்கு சென்றபோது அவர்களை இரண்டு பேர் வழிமறித்து சிறை பிடித்துள்ளனர். அந்த பெண்ணை காட்டுப்பகுதிக்கு வருமாறு போன் செய்யுமாறு அந்த 2 பேரும் அவர்களை மிரட்டினர்.
இதையடுத்து அதில் ஒவர் தனது சகோதரிக்கு போன் செய்து காட்டுக்கு வருமாறு கூறினார். அவரும் காட்டுக்கு வந்தார். அப்போது பஞ்சாயத்து தலைவர் ரம்ஜான் அன்சாரி மற்றும் அவரது நண்பர் முகமது ராசித் ஆகியோர் அந்த பெண்ணை அவரின் சகோதரரின் கண் முன்பு கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மேலும் அவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்தனர். இது குறித்து அந்த பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராசித்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அன்சாரியை தேடி வருகின்றனர்.











Click it and Unblock the Notifications