ராணுவ தளம் அருகே பறந்து வந்த டிரோன்.. சரமாரியாக சுட்ட இந்திய வீரர்கள்.. காஷ்மீரில் மீண்டும் பதற்றம்
ஸ்ரீநகர்: ஜம்முவில் நேற்று விமானப்படைத்தளத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் இரண்டு டிரோன்கள் ஜம்மு ராணுவ தளம் அருகே வந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது டிரோன்கள் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் டிரோன்கள் மூலம் ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் நேற்று இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இதில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

டிரோன்
இந்த தாக்குதல்கள் டிரோன் மூலம் நடத்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கு இந்த டிரோன் தாக்குதல் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. குண்டுகள் பொருத்தப்பட்ட டிரோன்கள், ரிமோட் உதவியுடன் இயக்கப்பட்டு நேரடியாக ஜம்மு விமானப்படைத்தளம் நோக்கி வந்துள்ளது. ஜிபிஎஸ் உதவியுடன் துல்லியமாக விமானப்படை தளம் நோக்கி இந்த டிரோன் வந்துள்ளது.

யார்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானும், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பும் இணைந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று இரவு மீண்டும் இரண்டு டிரோன்கள் ஜம்மு ராணுவ தளம் அருகே வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. ஜம்முவில் உள்ள கலுசாக் ராணுவ தளம் அருகே இந்த டிரோன் விமானங்கள் வந்துள்ளன.

டிரோன்
முதலில் 11.30 மணிக்கு ஒரு டிரோன், பின்னர் 1.30 மணிக்கு ராணுவம் தளம் அருகே இன்னொரு டிரோன் வந்துள்ளது. இதை பார்த்ததும் உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்த வீரர்கள், அந்த டிரோன்களை நோக்கி சுட்டனர். சரமாரியாக டிரோன்களை குறி வைத்து தாக்கினார்கள்.

தாக்குதல்
இதையடுத்து அந்த டிரோன்கள் அங்கிருந்து வேகமாக பறந்து சென்றன. இந்த டிரோன்கள் அதிக வேகத்துடன் இயங்கியதாக ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். இது சிறிய அளவிலான தாக்குதல் என்றாலும், நவீன டிரோன்கள் இப்படி தாக்குதலில் இறங்கி இருப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் டிரோன்கள் மூலம் பெரிய அளவிலான தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications