2 மகா. சகோதரிகளுக்கு விரைவில் தூக்கு... 9 சிறார்களைக் கொன்றவர்கள். தூக்கிலிடப்படும் முதல் பெண்கள்!
டெல்லி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இவர்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளதால் இவர்கள் விரைவில் தூக்கிலிடப்படவுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர்கள் ரேணுகா ஷிண்டே மற்றும் சீமா கேவிட். இருவரும் ஏழைக் குழந்தைகளைக் கடத்தி வந்து பிச்சை எடுக்கவும், திருடவும் பழக்கி அதில் ஈடுபடுத்தி வந்தனர். குழந்தைகளாக இருக்கும் வரை அவர்களைப் பயன்படுத்தி திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துவார்கள்.
வளர்ந்ததும் அவர்களைக் கொன்று விடுவார்கள். இவர்கள் குழந்தையைக் கொல்வது மிகக் கொடூரமாக இருக்கும். குழந்தைகளின் தலையை இரும்புக் கம்பியால் பலமாக அடித்தும், கழுத்தை நெரித்தும் கொடூரமாக ஈவு இரக்கமே கொல்வார்கள்.
கடந்த 1990ம் ஆண்டு முதல் 96 வரையிலான காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து 13 குழந்தைகளைக் கடத்தி அதில் 9 பேரைக் கொன்று விட்டனர். பின்னர் இருவரும் போலீஸில் சிக்கினர். இவர்களுக்கு விசாரணைக்குப் பின்னர் கடந்த 2001ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அப்பீல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கு இவர்கள் இருவரும் கருணை மனு அனுப்பினர். அந்த மனுவை தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் விரைவில் தூக்கிலிடப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் தூக்கிலிடப்படவுள்ள தகவல்கள் அவர்களின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது.
சுதந்திர இந்தியாவில் இதுவரை பெண்கள் யாரும் தூக்கிலிடப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தூக்கிலிடப்படும் முதல் பெண் என்ற பெயரை இவர்கள் இருவரும் பெறுகின்றனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications