2 மகா. சகோதரிகளுக்கு விரைவில் தூக்கு... 9 சிறார்களைக் கொன்றவர்கள். தூக்கிலிடப்படும் முதல் பெண்கள்!
டெல்லி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளுக்கு விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இவர்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளதால் இவர்கள் விரைவில் தூக்கிலிடப்படவுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர்கள் ரேணுகா ஷிண்டே மற்றும் சீமா கேவிட். இருவரும் ஏழைக் குழந்தைகளைக் கடத்தி வந்து பிச்சை எடுக்கவும், திருடவும் பழக்கி அதில் ஈடுபடுத்தி வந்தனர். குழந்தைகளாக இருக்கும் வரை அவர்களைப் பயன்படுத்தி திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துவார்கள்.
வளர்ந்ததும் அவர்களைக் கொன்று விடுவார்கள். இவர்கள் குழந்தையைக் கொல்வது மிகக் கொடூரமாக இருக்கும். குழந்தைகளின் தலையை இரும்புக் கம்பியால் பலமாக அடித்தும், கழுத்தை நெரித்தும் கொடூரமாக ஈவு இரக்கமே கொல்வார்கள்.
கடந்த 1990ம் ஆண்டு முதல் 96 வரையிலான காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து 13 குழந்தைகளைக் கடத்தி அதில் 9 பேரைக் கொன்று விட்டனர். பின்னர் இருவரும் போலீஸில் சிக்கினர். இவர்களுக்கு விசாரணைக்குப் பின்னர் கடந்த 2001ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அப்பீல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கு இவர்கள் இருவரும் கருணை மனு அனுப்பினர். அந்த மனுவை தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.
இதையடுத்து இருவரும் விரைவில் தூக்கிலிடப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரும் தூக்கிலிடப்படவுள்ள தகவல்கள் அவர்களின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது.
சுதந்திர இந்தியாவில் இதுவரை பெண்கள் யாரும் தூக்கிலிடப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தூக்கிலிடப்படும் முதல் பெண் என்ற பெயரை இவர்கள் இருவரும் பெறுகின்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications