ஜம்மு காஷ்மீரில் என்கவுண்ட்டர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் பலியாகினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில் தாக்கண்ட் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் ராணுவம் அந்த கிராமத்தை சுற்றி வளைத்தது. ராணுவ வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டபோது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு ராணுவமும் பதிலடி கொடுத்தது.
இதனைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இரண்டு தீவிரவாதிகளும் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications