இனி மந்திரி மச்சான்லாம் கார்ல சிவப்பு விளக்கோட சுத்தமுடியாது- உ.பி அரசு புதிய சட்டம்!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: வாகனங்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்த கட்டுப்பாடு விதித்து உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் விதித்த உத்தரவை அமல்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புக்கு உட்படாத நபர்கள் தங்கள் வாகனங்களில் சிவப்பு விளக்கு பயன்படுத்த உத்திர பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
தற்போது அரசியல்வாதிகள், அதிகாரிகள் என சுமார் 100 பேர் வரை சிவப்பு விளக்கு பொறுத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்த அவ்வரசு அனுமதி அளித்துள்ளது.
உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமே சிவப்பு விளக்கு பொறுத்தப்பட்ட வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications