Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உகாண்டா குண்டுவெடிப்புகள்- தமிழகத்தை சேர்ந்த 9 பேர் உட்பட இந்திய விளையாட்டு வீரர்கள் உயிர் தப்பினர்!

Subscribe to Oneindia Tamil

கம்பாலா: உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் இன்று அடுத்தடுத்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் உட்பட இந்திய வீரர்கள் அனைவரும் உயிர் தப்பி பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகாண்டாவில் அல்கொய்தா இயக்கத்துடன் நெருக்கமாக உள்ள ஷாபாப் என்ற பயங்கரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இன்று தலைநகர் கம்பாலாவில் இந்த இயக்கம் 3 தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தியது.

 தற்கொலை படை தாக்குதல்கள்

தற்கொலை படை தாக்குதல்கள்

கம்பாலாவில் நாடாளுமன்ற கட்டிடம், மத்திய போலீஸ் அலுவலக கட்டிடம் உள்ளிட்டவை அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் தற்கொலைபடை தீவிரவாதிகள் 3 பேர் மட்டும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சர்வதேச போட்டிகள்

சர்வதேச போட்டிகள்

இதனிடையே கம்பாலாவில் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் வீரர்கள் தங்கி இருக்கும் விடுதிகளுக்கு அருகேதான் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அடுத்தத்து நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 வீரர்கள் உயிர் தப்பினர்

வீரர்கள் உயிர் தப்பினர்

இப்போட்டிகளில் பங்கேற்க இந்திய பாரா பேட்மிண்டன் வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் கம்பாலாவுக்கு சென்றுள்ளனர். இவர்களில் 9 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய வீரர்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தொலைவில்தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இந்திய வீரர்கள் அனைவரும் உயிர் தப்பி பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அங்கிருந்து சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோக்கள் வெளியீடு

மேலும் கம்பாலா வெடிகுண்டு சம்பவ வீடியோக்களையும் இந்திய விளையாட்டு வீரர்கள் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்திய வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதால் உறவினர்கள் யாரும் பதற்றமோ அச்சமோ அடையத் தேவை இல்லை என்று பயிற்சியாளர் பத்ரிநாத் வீடியோ ஒன்றை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Para-Badminton India-ன் ட்விட்டர் பக்கமான @parabadmintonIN-ல் இந்திய வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்! நாங்கள் அதிகாரப்பூர்வமாக தங்கி இருக்கும் ஹோட்டலில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. தற்போது இங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என கூறி அந்த குண்டுவெடிப்பு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+