ஆம் ஆத்மி அமைச்சர் சோம்நாத் தலைமையிலான குழுவினர்தான் தவறாக நடந்தனர் - உகாண்டா பெண்

டெல்லியின் கிரிக்கி பகுதியில் சோம்நாத் பார்தி தலைமையிலான ஒரு கும்பல் நள்ளிரவில் நடத்திய ரெய்டின்போது பல உகாண்டா பெண்கள் தவறான முறையில் கையாளப்பட்டதால் சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து டெல்லி போலீஸார் சோம்நாத் பார்தி மீ்து வழக்குப் பதிவு செய்தனர். இதனால்தான் கெஜ்ரிவால் கொந்தளித்து டெல்லி காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராக தர்ணாப் போராட்டத்தை அறிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் பேசுகையில், உண்மையில் உகாண்டா பெண்களைக் காக்கும் வகையில்தான் பார்தி செயல்பட்டார். இதை உகாண்டா தூதரகமே பாராட்டியுள்ளது. பார்தியையும் அவர்கள் பாராட்டியுள்ளனர். கடிதமும் கொடுத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
ஆனால் தற்போது பார்தி தலைமையில் வந்த கும்பலே தங்களிடம் அத்துமீறி நடந்ததாக உகாண்டா பெண் ஒருவர் பார்தியை அடையாளம் காட்டியுள்ளார். இதனால் பார்தி மீதான காவல்துறை நடவடிக்கை இறுக்கமாகும் என்று தெரிகிறது.
பார்தி மீது டெல்லி மாஜிஸ்திரேட் முன்பு நேரில் ஆஜராகி இப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கிர்க்கி பகுதியில், வெளிநாட்டினர், குறிப்பாக உகாண்டா பெண்கள் தங்கியிருந்த இடத்தில் விபச்சாரம் நடப்பதாக அப்பகுதியினரிடமிருந்து வந்த புகாரைத் தொடர்ந்து சோம்நாத் பார்தி தலைமையில் பலர் அங்கு நள்ளிரவில் திரண்டு சென்று அதிரடியாக ரெய்டு நடத்தினர். இதையடுத்து போலீஸாரும் அங்கு விரைந்தனர்.
அந்த இடத்தில் போலீஸாருக்கும், பார்தி தலைமையிலான கும்பலுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த ரெய்டின்போது பார்தியுடன் வந்தவர்கள் , உகாண்டா பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பார்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தற்போது மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் பார்தியை அடையாளம் காட்டியுள்ளாராம். அந்த வாக்குமூலத்தை தற்போது போலீஸார் பெற்றுள்ளனர்.
இந்தப் பெண்ணை தற்போது இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக போலீஸார் சேர்த்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications