டெல்லி வந்தார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே.. மோடியுடன் இன்று பேச்சு!
இங்கிலாந்து பெண் பிரதமர் தெரசா மே, 3 நாள் சுற்றுப் பயணமாக நேற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ளார்.
டெல்லி: மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இங்கிலாந்து பெண் பிரதமர் தெரசா மே, 3 நாள் சுற்றுப் பயணமாக நேற்று இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். பிரதமரான பிறகு, ஐரோப்பா கண்டத்துக்கு வெளியே உள்ள ஒரு நாட்டுக்கு இரு தரப்பு பயணமாக தெரசா செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

டெல்லி விமானம் நிலையம் வந்து சேர்ந்த தெரசாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் இங்கிலாந்து தொழில் அதிபர்கள் சுமார் 40 பேரும் இந்தியா வந்தனர்.
இந்தியா வந்ததும் முதல் நிகழ்ச்சியாக, இன்று காலை டெல்லியில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாட்டை தெரசா மே தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல், டெல்லியில் மோடியைச் சந்திக்கும் தெரசா மே, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
விசா விதிமுறைகளை இங்கிலாந்து கடுமையாக்கி இருப்பதால், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த சந்திப்பின் போது தெரசா மேயிடம் இப்பிரச்சினை குறித்து மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பிற்குப் பின் இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டு அறிக்கை வெளியிடுவார்கள்.
முன்னதாக தனது இந்தியப் பயணம் குறித்து இங்கிலாந்து பத்திரிகை ஒன்றிற்கு தெரசா அளித்துள்ள பேட்டியில், "இந்தியா, நமது முக்கியமான, நட்பு நாடுகளில் ஒன்று. அது, உலகின் முன்னணி வல்லரசு நாடு. அதனுடன் நாம் கலாச்சார, சரித்திரபூர்வமான உறவுகளை பகிர்ந்து கொண்டுள்ளோம். நீண்ட கால பலன் அளிக்கக்கூடிய சீர்திருத்தங்களை பிரதமர் மோடி தலைமையில் இந்தியா செய்து வருகிறது.
இரு நாடுகளும் வலிமையான, முதிர்ச்சியான உறவை கொண்டிருப்பதுடன், அதை மேலும் ஆழப்படுத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆகவே, நான் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன்.
இங்கிலாந்தின் நலனுக்கு ஏற்ற காரியங்களை நாம் முன்னெடுத்து செல்வோம். வர்த்தகத்துக்கு நாம் தயாராக இருப்பதை எடுத்து சொல்வோம். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வலியுறுத்துவோம்.
இந்தியாவில் 'ஸ்மார்ட் சிட்டி', 'மேக் இன் இந்தியா' உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்படுவதால், அதன் இலக்கை எட்ட இங்கிலாந்து உதவ முடியும். அதே சமயத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் பணி முடிந்த பிறகே, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்" எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications